யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrowவைப் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சோதிலிங்கம் சந்திரகலா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று சென்றாலும்
அம்மா உங்கள் சிரித்த முகம் எங்கள் கண்கள் முன்னும்
உங்கள் கம்பிரமான குரல் காதுகளிலும் ஒலித்துக் கொண்டே
இருக்கின்றது அம்மா..
சொல்லி அழுவதற்கு ஆயிரம் கதைகள் வார்த்தைகள் இருந்தும்
அவை யாவும் மழையில் எழுதிய எழுத்தாய்
கரைந்து செல்கின்றன அம்மா..
நினைத்தவுடன் வந்து பார்க்கவும், ஆசை பட்டவுடன் கதைப்பதற்கும்
எட்டாத இடத்தில் நீங்கள் இருந்தாலும்
மனதால் தினமும் உங்களை பார்த்து, உரையாடிக் கொண்டு தான்
இருக்கின்றோம் அம்மா...
பிரிவின் துயரம் எவ்வளவு கொடுமை என்பது உங்கள் இழப்பு
தினம் தினம் எங்களுக்கு உணர்த்துகின்றது அம்மா...
நீங்கள் எங்களை விட்டு பிரிந்து எவ்வளவு காலம் வருடம் ஆனாலும்
உங்கள் நினைவுகள் ஸ்பரிஷங்கள் எங்களை விட்டு
இன்றும் என்றும் நிங்காது எங்கள் பாச அம்மா.....
தகவல்: கணவர், பிள்ளைகள்