யாழ். சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சீனிவாசகம் செல்வநாயகம் அவர்கள் 04-03-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் மகாலக்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான நடராசா ரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசதேவி அவர்களின் அன்புக் கணவரும்,கார்த்தீபன் அவர்களின் அன்புத் தந்தையும்,
அலலிகா அவர்களின் அன்பு மாமனாரும்,தேவி, ரதி, ராகினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இலங்கைராஜா, அமுதநாயகம், ஆனந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராஜாலச்சுமி, ராஜாகுலசிங்கம், ராஜகுலேந்திரா, காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரன், ராஜாகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
கொரோனா விதிகளுக்கு அமைய அன்னாரின் இறுதி நிகழ்வில் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்பதனால் அனுமதி பெற்று வரவும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.