யாழ். கட்டைக்காடு முள்ளியானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மரியாம்பிள்ளை மேரிறோஸ் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்து மாதம் சுமந்த எம் அன்னை மறைந்து
பத்தாண்டு பறந்ததம்மா- பாரினில் பரிதவிக்கும்
உள்ளங்களை இங்கே பார்க்க பறந்தோடி வாருமம்மா!
மறவா நினைவுகளை மனதோடு தந்துவிட்டு,
இறையோடு சென்று இன்று பத்து ஆண்டுகள்
வார்த்தைகளால் சொல்ல முடியாத
வலிகள் உங்கள் இழப்பு!
இருந்தபோதே எம்மைக்காத்த
காவல் தெய்வமே - இறந்தாலும்
எம்மை இறையாக்காப்பீரே!
ஆண்டுகள் எத்தனை கடந்தாலும்
எங்கள் ஆழ்மனங்களின் ஆணிவேர் நீங்கள்
எங்களுக்கான இலக்கணம் படைத்த
உங்களை பத்து அல்ல பல நூறு ஆண்டுகள்
சென்றாலும் மறக்கமாட்டோம்
என்றும் உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்...