யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், மீசாலை வடக்கு புத்தூர்ச் சந்தியை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி அருணாசலம் அவர்கள் 08-04-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை கஜவல்லி அம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
மயில்வாகனம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அருணாசலம்(இளைப்பாறிய உப அதிபர்- சாவகச்சேரி இந்துக் கல்லூரி) அவர்களின் பாசமிகு மனைவியும்,
ராதா, ராஜ், பாரத், ராஜி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சறோஜினிதேவி மற்றும் பரமேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் பாசமிகு மைத்துனியும்,
கமலநாதன், நரேந்திரன், ஜெயராணி, சுகந்தினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சகானா, ஆகாஷ், தேனுகா, சங்கீத், சந்தோஷ், மயூரா, மித்ரா, சாரங்கா, சுருதிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 1:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.