யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Épinay-sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்ட கறுப்பையா சிவபாதம் அவர்கள் 04-04-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கறுப்பையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
வள்ளியம்மா அவர்களின் அன்புக் கணவரும்
,ஜனகன், ஜனந்தன், தனஞ்செயன், ரமணிதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மீரா, கலையரசி, ஜனனி, சரண்ஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவசோதி, காலஞ்சென்ற கனகரட்னம், பரமநாதன், சரோஜினி, பரஞ்சோதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி, சுப்பிரமணியம், சரோஜினி, இந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெருசா, ஜெயவர்சன், ஏகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.