யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Northern California வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லலிதாம்பிகை தம்பிஐயா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் விண்ணுலகில் கால்பதித்து
இரண்டு ஆண்டுகள் சென்றபோதும்
எங்கள் இதயமெனும் கோவிலில்
நித்தமும் வாழ்கின்றீர்கள்!
பாசமாய் எம்மை வளர்த்த
அழகான சொத்தே...
சொல்லாமல் பிரிந்தீர்களே
திரும்ப முடியாத பாதையில்!
காலங்கள் உருண்டோடலாம்
ஆனாலும் கண்முன்னே நிழலாடும்
உங்கள் நினைவுகள்
ஒருபோதும் எம்மைவிட்டு அகலாது!
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
உங்கள் நிழலின் நிஜத்தைத்தேடி
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!