திதி: 08-05-2022யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், பெல்ஜியம், லண்டன் Gloucester ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அன்ரன் எட்வேட் ராஜினி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
சிந்தனைச் சிற்பியாய்
சிறந்த நல் மனைவியாய்
வந்தனை செய்தே
நல்வளமான வாழ்வு தந்தாயே!!
என்னை விட்டு எங்கு சென்றாய்?
உந்தனை நினைக்கையிலே
உள்ளம் தடுமாறி
உருக்குலைந்து போகிறோம்
என் செய்வோம் எம்தனை
தவிக்கவிட்டு எங்குதான் சென்றாயோ?
தேடுகிறோம் தேம்பி அழுகிறோம்
அம்மா! நீங்கள் இல்லா வாழ்வு
நிலவு இல்லா வானம் அம்மா
உங்கள் நினைவுகளை சுமந்து
நிழலுக்கு மலர் தூவி வணங்குகிறோம்
கள்ளமில்லா உங்கள் உருவை
எங்கு காண்போம்?
கனிவான வார்த்தைகளை
எங்கு கேட்போம்?
உங்கள் உடல் எம்மை விட்டு போனதம்மா
உங்கள் உயிர் எம்மோடு வாழ்கிறது
நீங்கா நினைவுகளுடன் என்றும்
எம் மனதில் வாழ்வீர்கள்!!!
உங்கள் நினைவோடு வாழ்ந்திடும்
அருமைக் கணவன், பிள்ளைகள், சகோதரங்கள்.