யாழ். தெல்லிப்பழை கொல்லன்கலட்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா வளசரவாக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரமேஸ்வரி ஜெயரவீந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உடலில் சுமந்து உதிரத்தை
உணவாய் ஊட்டி உன் உயிரை
பகிர்ந்து என் உருவம் தந்தாயே அம்மா!
இன்று எம் உடலும்
உயிரும் உன்னையே அழைக்கின்றது
அம்மா அம்மா என்று
உன் உடல் எம்மை விட்டு பிரிந்தாலும்
உயிர் என்றுமே எம்மோடு வாழும்
ஆயிரம் சொந்தங்கள்
அணைத்திட இருந்தாலும் அம்மா
உன்னை போன்று அன்பு
செய்ய யாரும் இல்லை இவ்வுலகில்!
எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும்
எம் அன்னையின்
மறுவரவுக்காய் காத்திருப்போம்
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!