யாழ். வடமராட்சி கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், மாலைதீவு, சாம்பியா, தென் ஆப்ரிக்கா Transkei, பிரித்தானியா Windsor Slough, Preston ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மங்கையர்க்கரசி ஆறுமுகம் அவர்கள் 03-06-2022 வெள்ளிக்கிழமை அன்று Preston இல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான Dr. குழந்தைவேலு பத்தினியம்மை தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும்,
காலஞ்சென்றவர்களான தம்பையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் (Police sergeant) அவர்களின் அருமை மனைவியும்
Dr. உமாபதி அவர்களின் அருமைத் தாயாரும்,
Dr. டொலாரிஸ் அவர்களின் பாசமிகு மாமியும்,
அருள்குமரன் அவர்களின் அன்பு அப்பம்மாவும்,
சிவநேசச்செல்வியம்மை (கனடா), புனிதவதி (இலங்கை), காலஞ்சென்ற Dr. சிரேஷ்டராஜா (தென் ஆப்ரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, சந்திரசேகரம், மாணிக்கவாசகர் மற்றும் திலகவதி ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான சிவராமலிங்கம், சிவபாதசுந்தரம், சோமாஸ்கந்தசிவம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
Dr. சேயோன், சசி, விசாகன் ஆகியோரின் பெரியம்மாவும்,
மகேஸ்வரி தங்கராசா, மீனா சிவகுருநாதன், உமாமகேசன், சித்ரா பாலசுப்பிரமணியம், பத்மா வித்தியாசாகரன், குமுதினி பாஸ்கரன், பவானி தேவானந், Dr. பரதன், சேதுபதிபகீரதன், ஆதி தற்பரானந்தன் ஆகியோரின் பெரியத்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.