யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி இராசரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
சீர்கொண்ட தீவில் நேர் கொண்ட தலைவனாய்
கார் கொண்ட மனம் போல் வாழ்ந்த தந்தை
வளம்மிகு வாழ்க்கையை முறையோடு போற்றி
உளம் நிறை மதியுடன் உரைத்த தந்தை....
உங்கள் உயரத்தைப் போலவே உள்ளமும் உயர்ந்து
உறவுகள், ஊரவர் மனங்களில் ஓங்கி நிற்குதப்பா!!!
மீண்டொரு தடவை உங்கள் மதிமுகம் காண விளைந்து
காண்போமா என மனம் ஏங்குதப்பா!!...
வேரில்லா மரமென உமை இழந்து நாம் பரிதவிக்கயிலே எமை
விழுதெனத் தாங்கிய ஊரவர், உறவுகள் துணை மறவோம்
ஆண்டொன்று மாயமாயக் கடந்து சென்றிருந்தும் எங்கள்
அகமோ ஏற்கவில்லை நீங்கள் இல்லை என்று....
சந்ததி தந்து அவர்நிலை கண்டு மகிழ்ந்து நின்றவரே
இந்நிலத்திடை நன்னடை போட வழிபல அமைத்தவரே
வாழ்ந்தது போதும் என நினைத்தீரோ, விரைந்து
விண்ணகம் செல்ல விளைந்த விதியெதுவோ?
கல்வியின் துணையது காசினி புகழ்ந்திட உயர்வழி உரைத்தவரே
அதன் வழி சென்றுயர் நிலை படைந்து உம்பெயர் ஏற்றி வைப்போம்!!
மரணத்தை வென்று மனங்களில் வாழும் எமது தந்தை
உங்கள் நினைவினை எம் உயிரினில் எழுதி அவனியில்
வாழந்து நிற்போம்!!!
ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!!