யாழ். உரும்பிராய் வடக்கு இந்து பாடசாலை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சீனிவாசகம் நவரத்தினம் அவர்கள் 10-06-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும்,
இராசமணி அவர்களின் அன்புக் கணவரும்,
ரூபிகா(லண்டன்), இரவிச்சந்திரன்(Bathu, Food & Wine உரிமையாளர்), இராதிகா(லண்டன்), Dr. உமா(பிரபல குழந்தை வைத்திய நிபுணர் Leeds- UK), காலஞ்சென்ற சாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவஞானம்(லண்டன்), சூரியகலா(லண்டன்), பத்மநாதன்(லண்டன்), ஜெகதாசன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற தருமலிங்கம்(இலங்கை), செல்லத்துரை, பத்மநாதன்(ஓய்வுபெற்ற மூத்த விரிவுரையாளர் - கனடா), சோதிமலர்(மலேசியா), இராசமணி(யாழ். நல்லூர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கபிலிஷா(பல் வைத்தியர்- கனடா), Dr. லக்ஷன்(குடும்ப வைத்தியர்- லண்டன்), அபிஷா(உள்ளக கட்டிட கலைஞர்- சுவிஸ்), பாதுஷா(Dept. Syndicate Associate- லண்டன்), கபினாஸ்(லண்டன்), சுபானி(Legal Adviser -கனடா) , நிதன்( High School Teacher- லண்டன்), ஜனனி(லண்டன்), லோஜிகா, சௌமியா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
கயிலன்(கனடா) அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-06-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் உரும்பிராய் வடக்கு இந்து பாடசாலை வீதி எனும் முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் வடக்கு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.