மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். மாதகல் கிழக்கை வதிவிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி அம்மாள் துரைராஜா அவர்கள் 17-06-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து இலட்சுமி தம்பதிகளின் மூத்த புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற துரைராஜா அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ரவீந்திரராஜா (சுங்கத்திணைக்களம்), தேவிகாராணி (கனடா), மணிமாறன் (கனடா), அனுராதா (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வளர்மதி, பாலச்சந்திரன் (கனடா), திருஉமா (கனடா), வரதராஜா (கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.