யாழ். கொட்டைக்காட்டைப் பிறப்பிடமாகவும், மூளாயை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி கணேசராசா அவர்கள் 27-06-2022 திங்கட்கிழமை அன்று மூளாயில் இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, சின்னம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற ஆறுமுகம், நகுலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,
தயாபரன், சிறீதரன்(ஐக்கிய அமெரிக்கா), கருணாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான வரதராஜா, பண்டிதர், மங்கையற்கரசி மற்றும் பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.