யாழ். சுன்னாகம் உடுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாலாம்பிகை ஸ்ரீதரன் அவர்கள் 29-07-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற அருணாசலம், சோதிப்பிள்ளை(கொக்குவில்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அருணாசலம் ஸ்ரீதரன்(JP- தீவு முழுவதும், ஓய்வுபெற்ற பொறியியல் உதவியாளர்- தேசிய நீர்வடிகாலமைப்புச் சபை) அவர்களின் அன்பு மனைவியும்,
தயாளினி(சுருக்கெழுத்தாளர்- நீதவான் நீதிமன்றம், சாவகச்சேரி), நளாயினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இராஜேஸ்வரி- சர்வேஸ்வரன், கமலேஸ்வரி, மகேஸ்வரி- ரவிச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று, அதனைதொடர்ந்து தாவடி இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.