யாழ்ப்பாணம் கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும் மற்றும் வவுனியா Sri Lanka, இந்தியா டெல்லி ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி சாந்தினி சிவானந்தன் அவர்களின் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
தாய்க்கு வரைவிலக்கணமே நீதானம்மா!
எங்களை அன்பு மழை பொழிந்து
பாசமாய் வளர்த்தெடுத்தாயே!
நீங்கள் மண்ணுலகைப் பிரிந்து பன்னிரு
மாதங்கள் சென்றதம்மா!
என்ன நடந்தது ஏது நடந்தது என்று
கணக்கிட்ட நாட்கள் அதற்குள் ஆண்டு
ஒன்று ஆகி விட்டதே!
நீங்கள் மறைந்து ஓராண்டு ஓடி
மறைந்தாலும் உங்கள் ஒளிமுகத்தை
முன் நிறுத்தி என்றும் உங்கள் மீளா
நினைவுகளுடன் வாழ்கின்றோம் அம்மா!
என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்!