முல்லைத்தீவு வற்றாப்பளையைப் பிறப்பிடமாகவும் மற்றும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி தங்கமணி மயில்வாகனம் அவர்கள் 13-10-2022 வியாழக்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அம்மையார், காலஞ்சென்ற திரு- சரவணமுத்து, திருமதி- சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற திரு- கந்தையா, திருமதி- பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற நல்லம்மா, மனோன்மணி, இரத்தினசிங்கம், காலஞ்சென்ற பாலு, பொன்மணி, தேவி, வீரசிங்கம், யோகராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கணேசரூபன், கவிதா, காந்தரூபன் ஆகியோரின் அன்புத் தாயும்,
திவாகர், சுகந்தினி, பிரதீபா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நீருஜா, ஜெஸ்வின், ஜானவி, ஜாகவி, லிந்துசா, றோஜிதன், செளமிகன், லிதுஸ்கா, சுயானா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.