முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா,
ஜெர்மனி ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட திரு நித்திலன் விக்னராஜா அவர்களின் நான்காம்
ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு நான்கு ஆனாலும்
உள்ளம் எல்லாம் தேம்புதய்யா
மனதினிலே நினைவுகளை
மறக்காமல் தந்துவிட்டு
மாயமாய் மறைந்து சென்றாயே!
ஆண்டுகள் நான்கு ஓடி
மறைந்தது ஆனாலும்
எங்கள் கண்களில் வழிந்தனீர்
காயவில்லையே!
நீங்கள் இறைவனடி சேர்ந்து நான்காண்டு
கடந்து விட்டாலும் நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!
வாழ்க்கை என்பது
இறைவன் வகுத்த வரைதானே!
அடுக்கடுக்காக நாற்பத்தி எட்டு மாதங்களாகின
அருகில் நீங்கள் இல்லாததால்
உங்கள் அன்புதனை இழந்தோமே!!
எம் உள்ளத்தின் உள்ளே
வளரும் ஒரு உன்னதமான
மனித தெய்வம் நீங்கள் தானே- தம்
அன்பான புன் சிரிப்பும்
பண்பான வார்த்தையும்
இனி எப்போது கேட்போம்!
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!!
உங்களது ஆத்மா சாந்தியடைய இறைவனை
பிரார்த்திக்கின்றோம்!!