யாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் குமாரவேலு சின்னத்தம்பி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணிபோல்
எம்மை காத்த அன்புத்தெய்வமே
ஆறிடுமோ எங்கள் துயரம்
நீங்கள் பிரிந்து ஒரு வருடம் ஓடிப் போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்.
ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள்
நினைவுகளும், நிகழ்வுகளும்
உங்கள் ஆத்மா சாந்தியடைந்து இறைவனடி சேர எல்லாம் வல்ல
இறைவனை வேண்டி தினமும் உங்கள் பாதம் பணிகின்றோம்.
உங்கள் பிரிவால் துயருறும்
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள்.