யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், லண்டன் Catford Lewisham ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லூக்காஸ் வில்சன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீர் விழி தோய!
நீங்கா நினைவுகள் மிளிர நின்
பிரிவின் காலம் ஆண்டு ஒன்று ஆனதே!
ஆறாத் துயரம் எம் தொண்டை அடைக்க
மீளாத்துயில் கொண்ட தந்தை உம்
முகம் காண முடியாமல்
நிழல் முகம் கண்டு நித்தம்
கண்ணீர் மல்கி வாடுகின்றோம்!
ஆறாத காயமாக நின்
மாய மறைவு எம் மனதை வதைக்க
மீளாத்துயருடன் உறவுகள் நாம்
உமை எண்ணி ஏங்குகின்றோம்!
மீண்டும் மீண்டும் உம்
பிரிவினை சொல்லும்
பல நினைவுகள் எமை வாட்டிட
ஆண்டு ஒன்றில் உமை
அஞ்சலி செய்து ஆராதிக்கின்றோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..