யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், அல்வாய் மடத்தடியை வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதி நவரட்ணம் அவர்கள் 24-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சபாபதி, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சதாசிவம், பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சற்குணராணி(ஓய்வுபெற்ற மருத்துவமாது) அவர்களின் அன்புக் கணவரும்,
கிருசாந்தி அவர்களின் பாசமிகு தந்தையும்,
கருணாகரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சோதிலிங்கம், கனகராணி, கமலாதேவி, கனகேஸ்வரி, கெங்காதேவி, கணேசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அஸ்விகா, அகர்நிஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.