யாழ்ப்பாணம் கொழும்பைப் பிறப்பிடமாகவும் மற்றும் பிரித்தானியா
Harrow ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு கிறிசாந்தஸ் தேவராஜன் பஸ்தியாம்பிள்ளை அவர்கள்
13-03-2023 திங்கள்கிழமை அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு- பஸ்தியாம்பிள்ளை, திருமதி-
சாந்தி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்றவர்களான திரு- அல்போன்சஸ், திருமதி- மேரியம்மா
தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சாந்தினி அவர்களின் பாசமிகு கணவரும்,
யூலியன், அந்தியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வினோதினி, பத்மினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
திஸ்ஸ, காலஞ்சென்றவர்களான சுகுமார், சுலோசனா மற்றும் றோகினி,
பெர்னாட், கிளரன்ஸ், றோகான் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஆனந்தா ஜோசப், ரஜனி, சாந்தா, வேணி ஆகியோரின் பாசமிகு சகலனும்,
அரோஷா, ரிலான், சுமி, சுதா, பிரசாந்த், கிரிஷாந்த், மீரா,
எவான், வினோதினி, ஜெசிக்கா, சுபோதினி ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
டிலக்ஷன், டயானி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.