யாழ்ப்பாணம் பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் மற்றும்
லண்டன் Harrow ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு சுதர்சன் குணரட்ணம் அவர்கள் 17-03-2023 வெள்ளிக்கிழமை
அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு- குணரட்ணம், திருமதி- பத்மராணி
தம்பதிகளின் பாசமிகு மகனும்,
திரு- ஸ்ரீபாலசூரியர், திருமதி- யோகேஸ்வரி தம்பதிகளின்
பாசமிகு மருமகனும்,
அமுதா அவர்களின் பாசமிகு கணவரும்,
யதுர்சன், கோபீசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திருக்குமரன், வாசுகி, சாரதாதேவி, காலஞ்சென்ற தேவகி ஆகியோரின்
பாசமிகு சகோதரரும்,
சித்ரலேகா, துஷ்யந்தி, சிந்துஜா, ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும்
யோகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
Tamil Tribute மூலமாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,
நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக் கிரியை குறித்த விவரம் பின்னர் அறியத்
தரப்படும்.