ஜேர்மனி Mönchengladbach ஐ பிறப்பிடமாகவும், லண்டன் Bristol ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த காந்தசீலன் சண்முகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நினைவிருக்கும் நாள் வரைக்கும்
கண்ணீர் அலை நடுவே
நட்புச் சூரியனாய்
உன்னை நாள்தோறும்
நினைத்திருப்போம் காந்தசீலா......
தாய் தந்தைக்கு அன்பான பிள்ளையாய்
தாரத்திற்கு தக்க துணைவனாய்
தன் குழந்தைகளுக்கு பாசமான தந்தையாய்
தன்நலம் கருதா பண்பாளனாய் வாழ்ந்திருந்தாய்
காந்தசீலா......
உன் தெளிவான இதயத்தில்
எங்கள் நினைவுகள் பதியட்டும்
உன் உயிர் பிரிந்தாலும்
உன் உடல் கலைந்தாலும்
உன் உறவு எம்மோடு வாழுமே
உன் நினைப்பு எம்மோடு பேசுமே காந்தசீலா......
எம்முயிரை உன்னில் தொலைத்துவிட்டு
உன் இதயம் சுமந்து நடக்கின்றோம் கண்ணீரோடு
ஓராண்டென்ன ஓராயிரம் ஆண்டானாலும்,
எம் மனதை விட்டு அழியாது உன் நினைவும் நின்முகமும்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
தகவல் : வாகீசன், பரீஸ் மாமா ஸ்ரீ, மற்றும் குடும்பத்தினர்