பிரித்தானியா லண்டன் Luton ஐப் பிறப்பிடமாகவும், Toddington, Milton Keynes ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பிரதீஷ் கருணாகரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு ஒரு நிமிடமாக கரைந்துவிட்டது ஐயா!
தீராத ஏக்கத்துடன் இன்னமும் துடிக்கின்றது எங்கள் இதயம்
உன் இனிய புன்னகையை மீண்டும் ஒருமுறை
காண்போமா எம் செல்வமே !
வாழ்க்கை என்ற வசந்த காலம் வரும்போதே
உன்னை வாரி அணைத்துக்
கொண்டானோ அந்த இறைவன் ?
ஐயா வலி தாங்க முடியாமல் நாங்கள்
வாழ்நாள் முழுவதும் துடித்து நிற்கின்றோம்...
ஒரு நாளும் மாறாது எம் சொந்தம்
எங்கள் உயிரோடு உயிர் சேர்ந்தது உன் பந்தம்
ஆண்டு ஒன்று சென்றாலும்
எம் மனங்களில் நிறைந்திருக்கிறாய் ஐயா !
வாழ்வில் இறப்பது இயற்கையின் நியதி
இளவயதில் நீ பிரிந்தது தான்
இறைவன் வகுத்த விதி!
காலங்கள் கடந்து போனாலும் எம் செல்வமே
இன்னும் கண்ணீர் மட்டும் ஓயவில்லை!
இன்றும் நீ எம்மோடு வாழ்ந்து கொண்டே இருக்கின்றாய்
என்றும் நீங்காத சோகம் எம் நெஞ்சங்களோடு!
ஈரவிழிகளுடன் உம் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்....