யாழ். சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட லோகநாயகி செல்வரத்தினம் அவர்கள் 07-06-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தியாகராஜா, பவளம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்ற நல்லையா செல்வரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கமலநாயகி அவர்களின் அன்புச் சகோதரியும்,
செல்வலோகினி, ரட்ணமோகன்(பிரான்ஸ்), வசந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பாலகிஷ்ணன், வானதி(பிரான்ஸ்), கல்யாணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,கிரிஷாந்தன்(பிரித்தானியா), அபர்ணா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
பிருந்தா(பிரான்ஸ்), பிரசாந்தன்(பிரான்ஸ்), ஹர்ஷன்(அவுஸ்திரேலியா) அனோஜன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
துஷியந்தன், தாரணி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
திரிஷானா, அன்சிகா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
விஜிதா, நிரஞ்சன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 10-06-2023 சனிக்கிழமை அன்று மு.ப 09:30 மணிமுதல் பி.ப 07:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 11-06-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிக்கு இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணிக்கு கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.ம்