அமரர் கந்தையா செல்லையாயாழ். அளவெட்டி தெற்கு கலைநகரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அதிபர் அமரர் கந்தையா செல்லையா 38வது ஆண்டு நினைவஞ்சலி.
அமரர் மாசிலாமணி செல்லையாயாழ். அளவெட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆசிரியை அமரர் மாசிலாமணி செல்லையா அவர்களின் 30ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலங்கள் உருண்டோடினாலும்
கண்ணீரோடு தான் நாம் கடக்கிறோம்
உங்கள் நினைவுகளோடு தான்
தினமும் பயணிக்கின்றோம்..
எங்கள் சோதனை தீரவில்லை
எம்மை விட்டு பிரிந்து
விட்டிர்களே இன்னும் சில காலம்
எம்மோடு நீங்கள் வாழ்ந்திருக்க கூடாதா ?
இன்று எம் குடும்பம் பேரன்
பேத்திகள் என விருட்சமாய்
விரியும் போது அதில் வேராக
இருந்து எம்முடன் வாழ்வீர்கள்
நம் மனங்களில் தெய்வங்களாய்
எப்போதும் எம்மோடு நீங்கள்
இணைந்தே இருப்பீர்கள்
உங்களின் பாதங்களில் கண்ணீராய்
அஞ்சலிகள் செலுத்துகிறோம்..!
தகவல்: உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.