யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிருபாகரன் பொன்னையா அவர்கள் 23-06-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா யோகம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான கனகசிங்கம் பாக்கியம் தம்பதிகளின் மருமகனும்,
வசந்தகுமாரி அவர்களின் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சிவயோகேஸ்வரன், உமாகேஸ்வரி, வரதலட்சுமி, யோகானந்தன், திருலோசனி மற்றும் கணேசானந்தன், திரிபுரச்சந்திரன், பத்மலோசனி ஆகியோரின் சகோதரரும்,
இந்திராணி, காலஞ்சென்றவர்களான பத்மினி, ஸ்ரீகாந்தா மற்றும் தேவிகா, மகேந்திரன், ரவீந்திரன், நிர்மலா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.