யாழ். வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த பரஞ்சோதி செல்வநிதி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலை கண்விழித்த
நொடி முதல் உன் ஞாபகங்கள்
உன் நினைவுகள் எங்கள் மனதில்
அழியா சுவடுகளாய் பதிந்துள்ளன
நீ இல்லாத வாழ்க்கை,
நரகமாய் உள்ளது!!
உன்னைப் பிரிந்த நாள் முதல் இன்று வரை
உன் அன்பிற்கு இணை யாருமில்லை
உன் பாசத்திற்கு ஏங்கும் எங்கள் ஏக்கங்கள்
உணர முடியாத வலியாய் எங்களை கொல்கிறது..
இறைவன் அவனுக்கு பிடித்தவர்களை சீக்கிரமே
தன்னுடனேயே கூப்பிட்டு விடுவானாம்
இத்தனை நல்ல குணம் படைத்த உன்னையும் அவன்
தன்னிடமே அழைத்து விட்டான்..
என்றும் உந்தன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்: குடும்பத்தினர்