யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா புளியங்குளம் A9 வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பரமேஸ்வரி இராசதுரை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
வேர் அற்ற மரமாய் ஆனோம்
வெறுமையில் சருகாய் போனோம்
நீ பெற்ற பிள்ளை நாம்,
நீ இன்றி என்ன ஆவோம்?
கலை அனைத்தும் கற்று தந்தாய்,
இன்று காட்டின் நடு விட்டுச்சென்றாய்
வெளியேற வழி தெரியவில்லை,
விழித்தாலும் இருள் குறையவில்லை
கரம் பற்றி கரை சேர்க்க மீண்டு வா!
நாம் தாலாட்ட எம் பேத்தியாய் மீண்டும் வா!
என்றும் உங்கள் நினைவுகளுடன்
பிள்ளைகள், பெறாமக்கள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், மற்றும் சகோதரி அன்னம், மச்சாள்
தகவல் : ரூபி