யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குணாளன் குகானந்தன்(லெப் கேணல்) அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
தாய் தந்தையின் செல்ல மகனே,
எங்கள் வீட்டின் மூத்தவனே
உம்மை பிரிந்து ஆண்டுகள் பதினைந்து என்ன,
பல்லாயிரம் ஆண்டுகள் உன் கதை பேசும் ஐயா....
இன்னும் வாடுது உன் வீட்டின் நிழல் மரங்கள்
உன்னை அரவணைத்த கரங்கள் நீ இல்லாமல்
ஆணி வேர் இல்லாத ஆழமரமாய் இன்றும் வாடுதையா..
மண்கிழித்து வெளிவந்து
சாவீரச்செய்தி சாற்றி
உறவுரைத்து பேசும் நாள்
விழியில் பொலபொலவென்று
நீர்த்தாரை வீசும் நாள்
தமிழீழம் விடியும் என நம்பி பாடும் நாள்...
விதைத்த பயிர்கள் அனைத்தும் ஒருநாள் விடிவு வரும்.
எனவே அன்புவை தேடி அன்பான உறவுகள் பல.....
தகவல்: குடும்பத்தினர்