யாழ். கொக்குவில் பிரம்படியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Munchen ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த பூபதி சந்திரமோகன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆசை ஆசையாக எம்மை வளர்த்து
அறிவூட்டி அன்பிலும் பண்பிலும்
நாம் வளர எம்மை தனியே தவிக்க விட்டு
இறைவனடி சென்றதேனோ?
உங்கள் உடல் எம்மோடு இல்லாவிட்டாலும்
உங்கள் உருவமும் உயிரும்
என்றும் எம்மோடுதான் அம்மா...!!!
ஆயிரம் உறவுகள் இருந்தென்ன
அம்மா என்ற உறவுக்கு நிகர் உண்டா?
ஆண்டாறு ஆண்டுகள் ஆனாலென்ன
இன்னும் ஈராயிரம் ஆண்டுகள் கடந்தாலும்
எங்கள் உள்ளங்களில் என்றென்றும் ஒளிவிடுவீர்கள் அம்மா...!
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும்
கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்