யாழ். காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பத்மநாதன் அவர்கள் 14-07-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி ஆறுமுகம்(பாலாவோடை தமிழ் கலவன் பாடசாலை அதிபர்) தம்பதிகளின் மூத்த மகனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பத்ரிநாதன்(கண்ணன் - கனடா), கேதாரநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சபாநாதன்(City trade cooperation- வவுனியா), புவனேஸ்வரி(காரைநகர்), ஜெகநாதன்(ஒய்வுநிலை ஆசிரியர்), காலஞ்சென்ற செந்தில்நாதன்(City Agency- வவுனியா), சிறீரங்கநாதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மோகனாம்பிகை, சீவரத்தினம், செல்வரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சர்மிளா அவர்களின் அன்பு மாமனாரும்,
வினிஷா, ஷாரதி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 16-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை ஜெயரட்ண மலர்ச்சாலையில்(Elvitigala Mawatha, Colombo8) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்