ஜெர்மனி krefeld ஐ பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்டிருந்த நிஷான் சிவகுலேந்திரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் ஆருயீர் குலக்கொழுந்தே?
புன்னகை பூத்த முகமே!
வாழ்ந்ததெல்லாம் போதுமென்றா
எம்மை பாதியிலேயே தவிக்கவிட்டு சென்றாய்?
இறப்பென்பது நியதியென்பர் ஆனால்
இளம் வயதில் உன்னை இழந்தது நியாயமா?
உதடு மட்டுமே சிரிக்கின்றது
உள்ளமோ கண்ணீரில் மூழ்கின்றது
உன் நினைவோடு நானிருக்க
உற்ற உடன்பிறப்புகள் ஏங்கி நிக்க
எங்கு சென்றாய் என் செல்வமே!!
உன்னிடத்தை நிரப்பிடவே
அண்டம் எல்லாம் தேடிவிட்டோம்
உனக்கிணையாய் யாருமில்லைப்பா!!
நிஜமாய் கண்ட உன்னை
நிழற்படமாய் பார்க்கும் போது
நெஞ்சம் விம்முகிறது...
நகர்கின்ற நாட்கள் விரைந்து சென்றாலும்
உன் அகலாத நினைவுகளில் நாங்கள் இங்கு
ஆண்டு 10 மறைந்தாலும்
உன் நினைவுகள் ஒரு நாளும்
எம்மை விட்டு மறையாது நிஷான்
படைத்தவனே மறுபிறப்பு என்ற ஒன்று
உண்மையெனில் நீ எம்மோடு வந்திணைய
வேண்டுகிறேன் இறைவனிடம்
கலங்கிய விழிகளுடன் கண்ணீர்த்
துளிகளைக் காணிக்கையாக்கும்....
குடும்பத்தினர்