யாழ். கொக்குவில் நந்தாவிலைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், சாவகச்சேரி, சிட்னி அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் கோபாலகிருஸ்னன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் திருவுருவே!
அகத்தின் ஒளிவிளக்கே!
அப்பா நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
ஓராண்டு ஆன போதும்
உம்மை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம் அப்பா!
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனதுவோ அப்பா!
எம்மை ஒரு நிமிடம் காணாவிட்டாலும்
துடித்து பதை பதைத்த நினைவுகள்
இன்னும் கண்ணீர் விழியை நனைக்கின்றது அப்பா!
எம்மை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எம்மை விட்டு நீண்ட தூரம் சென்றாலும்
மறையாது அப்பா!
ஒருபோதும் உம் கொள்கை
நம்வாழ்வில் என்றும் மறையாது அப்பா!
உங்கள் நினைவுகள்
எம் மனதை விட்டு நீங்காது அப்பா!
தகவல் : குடும்பத்தினர்