யாழ். சாவகச்சேரி சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், இங்கிலாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிஜயா வைகுந்தவாசன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அப்பா! அப்பா! அப்பா
ஆண்டு மூன்று சென்றாலும்
ஆறவில்லை மனது!
ஆண்டுகள்பல சென்றாலும்
ஆறாது ஆறாது உங்கள் நினைவுகள்
நீங்கள் மறைந்த நாள்முதலாய்
தீராத் துயரத்தில் தேம்புகிறோம் நாளும்!
எம்மை தனியே தவிக்க விட்டு
இமைகளை ஏனோ மூடிவிட்டீர்கள்!
நினைவிழந்து செயல் இழந்து
நிற்கதியாய் நிற்கின்றோம் அப்பா!
கணப்பொழுதும் மனதில் எண்ணங்களும்
செயல்களும் நீங்களாக கண்களை மூடி
காட்சியப்படுத்தி கனவுகளில் வாழ்கிறேன் நாளும்!
உங்கள் நினைவுகள்தான் எம்மிடத்தில்
நிஜத்தில் நீங்கள் ஏனோ ஆண்டவனிடத்தில்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை தினம் பிரார்த்திக்கும்
உங்கள் மனைவி, பிள்ளைகள் மற்றும்
குடும்பத்தினர்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல் : குடும்பத்தினர்