நீர்கொழும்பு கொச்சிக்கடையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஜெயலட்சுமி தருமகுலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு நினைவலைகள்
அம்மா நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
ஆண்டொன்று உருண்டோடி விட்டது
அம்மாவின் அன்புக்கு ஈடாக இவ்வுலகில் ஏதுமில்லை
உம்மைப் போல் அரவணைக்க யாருமில்லை
நீங்கள் ஈன்றெடுத்த பிள்ளைகள் நாம்
வெவ்வேறு திசைகளில் நிர்க்கதியாகிவிட்டோம்
உங்கள் வாழ்த்துக்கள்,
பாராட்டுக்கள் அறிவுரைகள்
இல்லாமல் தளர்ந்து போகின்றோம் அம்மா
வாழும் காலத்தில் உம்மைப் போல் நடந்து,
தெய்வபக்தியோடு நீர் காட்டிய
வழியினிலே நடப்போம் அம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை என்றும் பிரார்த்திக்கும்
கணவன், மக்கள், சகோதரர்கள், மைத்துனர்கள்