யாழ்ப்பாணம் கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Rotterdam Pijnacker ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு சிதம்பரநாதன் அப்பையா அவர்கள் 25-11-2023 சனிக்கிழமை அன்று நெதர்லாந்தில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பையா கௌரிஅம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான துரைச்சாமி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
முத்துராணி அவர்களின் அன்புக் கணவரும்,
நிலானி, இராகவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கண்ணன், தாரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆர்த்திகா, அர்ஜூன், யுவன் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும்,
தட்சணாமூர்த்தி, மகாதேவன், சறோயினிதேவி, தேவசகாயம், விக்நேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
முத்துலட்ச்சுமி, புஸ்பராணி, கனகலிங்கம், யசந்தரூபி, இராசமலர் சிவநாதன், தங்கராணி பரராஜசேகரம், விஜயராணி விவேகானந்தன், செல்வராணி சதானந்தன், புஸ்பராணி ஜெயானந்தம், அன்பழகன் விமலாதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 27-11-2023 திங்கட்கிழமை முதல் 02-12-2023 சனிக்கிழமை வரை klapwijkseweg 91, 2642 RA Pijnacker Netherland எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்படும்.
நிகழ்வில் கலந்துக்கொள்ள விரும்புவர்கள் இராகவனை(+31614573465) தொடர்பு கொள்ளவும்.