யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், தொட்டிலடியை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி சிவப்பிரகாசம்(Retired Chief Stores Liaison officer- Irrigation department in Srilanka) அவர்கள் 08-08-2020 சனிக்கிழமை அன்று இறைபாதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கார்தியேசு சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
விக்கினேஸ்வரன்(பிரித்தானியா), காலஞ்சென்ற ஈஸ்வரன், கங்காதேவி(நோர்வே), யோகேஸ்வரன்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஏகாம்பரம்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற கனகரத்தினம், சண்முகநாதன்(இலங்கை), சகாதேவன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
தனபாலசிங்கம்(நோர்வே), ரேவதி(பிரித்தானியா), தமயந்தி(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திவ்யன்(பிரித்தானியா), நோர்வேவைச் சேர்ந்த துவாரகா, துசித்தா, சாஜிகா, ரிகேஸ், பிரகேஸ், தவினா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
நோர்வேவைச் சேர்ந்த எமிலியா, எலியோத் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.