யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட துரையப்பா அழகரத்தினம்(முன்னாள் பிரபல வர்த்தக உரிமையாளர்- Newtone Electricals) அவர்கள் 13-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி துரையப்பா தம்பதிகளின் அன்பு மகனும்,
பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
சிறீபாஸ்கரன்(இலங்கை), சீறீகாந்தன்(கனடா), சிறீரஞ்சன்(கனடா), கலாராணி(ஐக்கிய அமெரிக்கா), புஸ்பராணி(இலங்கை), சிவாநந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குமுதினி, வாசுகி, சுபாங்கினி, சிவகுமார், சரவணபவன், கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும், சீவரத்தினம், தங்கரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலாவதி அவர்களின் அன்பு மைத்துனரும்,
பவித்திரா, காந்தரூபன், வாகீசன், ஜனனி, றோஷன், ஆதிரை, லக்ஷான், பிரணவன், வைஸ்ணவி, தர்ஷன், ரமணன், தர்ஷிகா, கஜன், ஐங்கரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ராம், அமிர்ஷயன், ஆதிரா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-09-2020 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இல.28, சேர்பொன் இராமநாதன் வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.