வவுனியா பூந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், மகாறம்பைக்குளம் பிரதான வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சேது மகேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 20-10-2020
ஈன்றவளே எம் தாயே உம் இன்முகம் தான் எங்கேயம்மா?
இப்புவியில் எமைவிட்டுப் பிரிந்து
ஆண்டொன்று ஆனததே அம்மா...
தெய்வமே! எம்மை விட்டு சென்றதெங்கே!
உங்கள் பிரிவை ஆற்றவும் முடியவில்லை
ஆறவும் முடியவில்லையே அம்மா....
கண்னின் இமையானீர் அன்று
எம் கண்ணீரின் கதையானீர் இன்று
விழிபோல் காக்குந்தெய்வமாய்
என்றும் எம்முடன் இருப்பீர்கள் அம்மா....
எங்கள் பாச ஒளிவிளக்கே
ஓர் ஆண்டு முடிந்தாலும் உங்கள் முகம்
எங்கள் நெஞ்சை விட்டு என்று அகலாது அம்மா....
நீங்கள் இல்லாத உலகம் இன்று இருளானது
இனி எங்கு காண்போம் உங்களை
போல் ஒரு குணவதியை?
ஏங்கித்தவிக்கின்றோம் ஏமாந்து போகின்றோம்
மீண்டும் வந்திடம்மா ஒருமுறையேனும் எங்களிடம்...
உங்கள் பிரிவைத் தாங்காது துயருறும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
மற்றும் உற்றார், உறவினர்கள்
தகவல் : சுவீந்திரன் குடுத்பத்தினர்