யாழ். கோப்பாய் தெற்கு இருபாலையைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி முத்துலிங்கம் அவர்கள் 17-02-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா, நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு இளைய மகளும், காலஞ்சென்ற சிவப்பிரகாசம், செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவப்பிரகாசம் முத்துலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சரோஜினிதேவி, செல்லத்துரை(ஆசிரியை), சற்குணதேவி இராசா(ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Dr. கஜானா கெங்காதரன், Dr. கஜன், துசாயினி கிரிகரன்(லண்டன்), வேனிலான்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
கெங்காதரன், Dr. டிமாலினி, கிரிகரன், நிஷாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செல்லத்துரை(ஆசிரியர்), காலஞ்சென்ற இராசா(ஆசிரியர்), காலஞ்சென்றவர்களான அ.பாக்கியலக்சுமி, சி.பாலசிங்கம், சி.கந்தசாமி, செ.கிருஷ்ணாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-02-2020 புதன்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மம்மிக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.