யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை பூரணம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அள்ளிவிட்ட உறவு அம்மா!
அணைத்து விட்ட கைகள் அம்மா!
சொல்லி விட்ட வார்த்தைகள் அம்மா!
தூக்கி விட்ட செயல்கள் அம்மா!
சொல்ல துடிக்கும் எந்தன் குரலில்
ஏங்கி தவிக்கும் இந்த நாளில்
எங்கு சென்றாய் எந்தன் தாயே?
என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க அம்மா
உங்கள் முகம் காண!
திருப்ப முடியாத காலத்தை
உங்கள் நினைவுகளுடனும்
நிழல்ப்படத்தினூடாகவும்
திரும்பிப்பார்க்கின்றோம்
பத்து மாதம் சுமந்து பெற்ற தாயின் பாசம் அவர் மறைந்து
பத்து ஆண்டுகள் ஆனாலும் தொடரும்உங்கள் ஆத்ம சாந்திக்காக
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.