யாழ். தெல்லிப்பளை கொல்லன்கலட்டி யார்வத்தையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னதம்பு சிவபாதசுந்தரம் அவர்கள் 08-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், சின்னதம்பு பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
சரவணமுத்து செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற வள்ளிநாயகி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஸ்ரீகௌரிதேவி(கௌரி குமார்), இராமச்சந்திரன்(ராம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஸ்ரீகணேசகுமார், சித்ரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, கிருஸ்ணசாமி, ராஜகோபால் ஆகியோரின் அன்பு மூத்தச் சகோதரரும், அஜந், தாட்சாயினி, துளசி, ஷரீனா, ஜானுஷா ஆகியோரின் ஆருயிர்ப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.