யாழ். கொக்குவில் மேற்கு மஞ்சவனப்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Nuremberg ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவகாமசுந்தரி புவனேந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
மனைவியாக வந்த மங்கள குலவிளக்கே
நல்லறமாய் வாழ்ந்து காட்டிய நல்வாழ்வே
தவறேதும் செய்திடாமல் துணை நின்று காத்தவளே
தனியாக தவிக்க விட்டு சென்றதேனம்மா?
எங்களை காத்திருந்த தெய்வம்
இன்று கைவிட்டு போனதுவே!!
என்னாலும் உனை மறவோம்
உள்ளத்தால் வணங்கிடுவோம்
ஓராண்டானாலும் உன்குரல் கேளாது
உயிரற்று இருக்கின்றோம் நாமம்மா
வற்றாத வாழ்வுக்கு வகையாக வழி சொல்லி
எம்மை வளமுடன் வாழவைத்தாய்
இன்று தேற்றுவார் இன்றி தேம்பி அழுகின்றோம்
மீண்டு வந்திடம்மா எங்களிடம்.......
எங்கள் ஆருயிர் தாயின் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!