யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட வேதநாயகம் சோமசுந்தரம் அவர்கள் 13-01-2021 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேதநாயகம் இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான நல்லதம்பி நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சற்குணம் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சரவணபவன், சறோஜினி, திருக்குமரன், குகனேஸ்வரி, கோபாலன், லலிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெகதீஸ்வரன், அன்ரன், ராயமலர், சாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, சங்கரப்பிள்ளை, சின்னையா, மீனாட்சி, சிவக்கொழுந்து, வள்ளியம்மை, தெய்வானை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சபாரட்ணம், மங்கையற்கரசி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யோனத்தான், அன்ரூ, பிரதீபன், பிரவீத், அனுஜா, பிறான்ரன், சுதாகரன், கோட்னி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.