யாழ். வட்டுக்கிழக்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட நவமணி சிதம்பரப்பிள்ளை அவர்கள் 02-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பியப்பா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செல்லையா சிதம்பரப்பிள்ளை(சங்கரத்தை பத்திகாளி ஆலய அறங்காவலர்களில் ஒருவர்) அவர்களின் அன்பு மனைவியும்,
கண்ணதாசன்(பிரித்தானியா), மோகனதாசன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
துளசி அவர்களின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேற்பிள்ளை, சிவபாலரத்தினம் மற்றும் தர்மலிங்கம்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தம்பையா, அன்னம்மா மற்றும் செல்வராணி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சயந்தன், அச்சுதன் ஆகியோரின் அருமைப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.