யாழ். பழைய பூங்காவீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த விசேந்தி அருளானந்தம்(முன்னாள் ஆசிரியர்- பலாலி ஆசிரியர் கலாசாலை) அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
இன்று என் தந்தையின் ஓராண்டு நினைவு நாள்
அன்புக்கும் நேசத்திற்கும் இடையில் நாங்கள் வாழ்ந்திருக்கிறோம்
கோபத்தை காட்டிய அளவு நெஞ்சின் நேசத்தை காட்டவில்லை பாசச் சிறகுகளில் சிறையிருந்த காலம் என்றும் சுகமானது
அன்பும் இழப்பும் இடைவெளி அல்ல உங்கள் நினைவின் பொக்கிஷம் எங்கள் நெஞ்சுக்குள் நிலைத்து இருக்கும்
காலம் என்பது நினைவுகளின் சிறகு விளங்கி கொண்டாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் நீண்ட தூரம் பயணித்து இருக்கிறோம்
உங்கள் ஆத்மா சாந்தி அடைய என்றும் பிரார்த்திக்கும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார், உறவினர்கள்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், அந்நாளில் நாம் நெஞ்சம் கனத்து கண்ணீர் சொரிந்து கலங்கி நின்ற வேளையில் உணர்வோடு, உரிமையுடன் ஓடிவந்து ஆறுதல்கள் நவின்றவர்களுக்கும், எம் துயர் போக்க அருகிருந்து உதவியவர்கள், இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மற்றும் உற்றார் உறவினர், நண்பர்கள், இன்னும் பல வழிகளில் உதவிகள் செய்த அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.