முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம் ஆனந்தபுரத்தை பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தை தற்காலிக வதிவிடமாகவும், லண்டன் லூசியம் Catford ஐ நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் செல்வரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அணையா தீபம் அணைந்ததேனோ? எங்கள்
அன்பு தெய்வம் மறைந்ததேனோ?
விதி என்னும் இரண்டு எழுத்து உங்களை
வேரோடு சாய்த்து ஆண்டொன்று ஆனதே ஐயா ...!
ஆறுமோ எங்கள் துயரம் மாறுமோ உங்கள் நினைவு ...!
பாசமுள்ள நீங்கள் எங்களை
பரிதவிக்க விட்டுச்சென்றது ஏனோ?
கடந்து விட்ட ஆண்டுகளில் கலங்காத நாளில்லை ஐயா ...!
கதறி அழுகிறோம், கலங்கித் துடிக்கிறோம்
கண் காணாமல் மறைந்து விட்டீர்களே?
ஓராண்டு ஓடிமறைந்து விட்டது ஆனாலும்
என்றென்றும் உங்கள் நினைவலைகள்
அழியாது எங்களுடனே வாழும்!!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
என்றும் உங்கள் பிரிவால் வாடும்
அன்பு மனைவி, பிள்ளைகள் மற்றும் உற்றார், உறவினர்கள்