யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா உத்தரம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசமிகு நிழல் பரப்பி
எங்கள் ஏற்றமிகு வாழ்விற்கு
மெழுகுவர்த்தியாய் தனையுருக்கி
ஒளி பரப்பிய எங்கள் தாயே!
வாழ்க்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
இன்றுடன் ஓராண்டு
முடிந்தாலும் உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு விலகாது!
ஈடில்லா எங்கள் பொக்கிஷம் நீங்கள் தானே
உங்களுக்கு நிகர் வேறு யாரம்மா?
காணவில்லையே எம் கடவுளை
எங்கள் தெய்வம் நீதானே அம்மா
இன்று பிரிவு என்னும் துயரால்
ஈராண்டு ஓடி மறைந்தாலும்
எம் உள்ளங்களில் என்றும் நீங்காமல்
நிலைத்து வாழ்வீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
பிள்ளைகள் : இரத்தினகுமார், Dr. கலாவதி, சந்திரகுமார், ஜெயகுமார்