யாழ். வறுத்தலைவிளான் தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கெஜஞானவதி இராஜசிங்கம் 06-05-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வறுத்தலைவிளானைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(ஓய்வு பெற்ற புகையிரத நிலைய அதிபர்) சிவஞானவதி தம்பதிகளின் அன்பு மகளும்,
கட்டுவனைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மலாயன் பென்சனியர் தில்லையர் கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா இராஜசிங்கம்(ஓய்வுபெற்ற உதவிப் பணிப்பாளர்-மதுவரித்திணைக்களம்) அவர்களின் அன்பு மனைவியும்,
றவீன்(Engineer- Canada), கஜன்(MRI/CT Technologist- USA ), றஜீத்(Restaurant Chain Owner- Toronto Canada), றஜீவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சாமினி அவர்களின் அன்பு மாமியாரும்,ஆரிஷ் அவர்களின் அன்பு அப்பம்மாவும்,
யூனியன் கல்லூரி பழைய மாணவர்களான காலஞ்சென்ற குகஞானவதி திருச்செல்வம், குணஞானவதி குலசிங்கம்(Retired MLT Teaching Hospital- யாழ்ப்பாணம்), குலஞானவதி மகாலிங்கம்(கனடா), செந்தில்ஞானவதி சிவலிங்கம்(etired chief pharmacist- யாழ்ப்பாணம், கனடா), காலஞ்சென்ற குகஞானலிங்கம், மகாஞானவதி சண்பகசுந்தரம்(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், தனலஷ்மி நாகலிங்கம், பொன்மலர் நல்லையா, குலசிங்கம், தர்மபூபதி சிவராஜா, பாலசிங்கம் மற்றும் ரட்ணசிங்கம்(லண்டன்), அன்னலட்சுமி சண்முகநாதன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.